Sunday, January 10, 2010

வவுனியாவில் ‘தேர்தல் பொங்கலை’ நடத்த மகிந்தவும் பரிவாரங்களும் தயார்

எதிர்வரும் தைப்பொங்கல் தினத்தன்று வவுனியாவில் பெரும் பணச்செலவில் “கோலாகலமாக’ தேர்தல் பொங்கலை நடத்துவதற்கு மகிந்த அரசு ஆயத்தங்களைச் செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அன்றைய தினம் வவுனியாவிலுள்ள மக்களையும் நலன்புரி நிலையங்களிலும் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்களையும் திரட்டி தமிழ் மக்களின் ஆதரவு தம் பக்கமே உள்ளது என்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்துவதற்கு மகிந்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் பிரமாண்டமாக நடத்தப்படத் திட்டமிடப்பட்டுள்ள இந்தப் பொங்கல் தேர்தல் சட்டத்திற்கு முரணானதாக இருப்பதால் இதனைத் தடுத்து நிறுத்த தேர்தல் ஆணையாளர் முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment